சியோனிசத்திற்கு எதிராக பாலஸ்தீன மக்களைப் காப்பாற்று!

ஏகாதிபத்தியங்களின் இரட்டை அரசுப் பொறிமுறைக்கு எதிராக யூத-அரபு தொழிலாள வர்க்கத்தின் கூட்டு சோசலிச அரசு!

கொழும்பு நடவடிக்கை குழுவின் (CAC) பிரகடனம்

Exodus
முப்பது மணி நேரத்தில் காசாவில் இருந்து வடக்கிலிருந்து தெற்காக ஒரு மில்லியன் மக்கள் வெகுஜன வெளியேற்றம். வெள்ளிக்கிழமை, அக்டோபர் 13, 2023. (AP Photo/Hatem Moussa)

காசா பகுதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஒடுக்கப்பட்ட மக்களை சிறைபிடித்து, அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுத்து, விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலிய அவசரகால தேசிய அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துங்கள். அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து முற்போக்காளர்களும் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக அணிதிரட்டப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கடந்த 13ம் தேதி வடக்கு காசா பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது.  இன்று (அக்.16) காலை நிலவரப்படி 500,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் மக்கள் மத்தியில் இராணுவத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.  இதேவேளை அகதிகள் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.  சுவாச இயந்திரங்களை இயக்க போதுமான எரிபொருள் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கின்றனர்.

நம் கண் முன்னே, நாஜிகள் செய்த குற்றத்திற்கு ஒப்பான ஒரு பெரிய குற்றம் அரங்கேற்றப்படுகிறது.  இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், வேண்டுமென்றே பட்டினி மற்றும் நீர் அற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.  காசாவிலுள்ள ஐ.நா.வின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர், “காசாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று விவரிக்கிறார்.  “நீர் என்பது உயிர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  காசாவில் தண்ணீர் தீர்ந்து வருகிறது. மேலும் காஸாவில் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது….  தாமதமாகுவதற்கு முன் காசா மீதான முற்றுகையை தவிர்க்க வேண்டும். எரிபொருள், தண்ணீர், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை உதவி நிறுவனங்கள் பாதுகாப்பாகக் கொண்டு வர முடியுமாயிருக்க வேண்டும்.  எங்களுக்கு இப்போது அது உடனடியாக தேவை,” என்று அவர் அறிவித்தார்.

இன்று வரையும் காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களால் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,600ஐத் தாண்டியுள்ளது. இந்த மிருகத்தனமான இனச்  சுத்திகரிப்புக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தனது கடற்படையை மத்தியதரைக் கடலில் வைத்திருக்கிறது.  ஒடுக்குமுறை இஸ்ரேலை இந்தியா போன்ற முதலாளித்துவ அரசுகள் மற்றும் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் ஆதரிக்கின்றன.  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஆழமடைவதைக் கண்டு அஞ்சி, பாலஸ்தீனத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் தூண்டுதல்களை ஆரம்பித்தார்.

Destriction
அக்டோபர் 10, 2023 அன்று காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட பேரழிவு. ராய்ட்டர்ஸின் உபயம், முகமது சேலம்

பிரதான விடயங்களை பார்க்கும் போது தெளிவாகின்றன.  உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் பக்கம் நிற்கிறார்கள்.  அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, “இஸ்ரேலிய பயங்கரவாதம்” மற்றும் “பாலஸ்தீன விடுதலை” என்ற வாசகங்கள் தாங்கிய போராட்டங்கள் வலுப் பெற்றன.  ஹமாஸை ஆதரிப்பவர்களை கைது செய்யப் போவதாக பிரிட்டிஷ் காவல்துறையின் மிரட்டலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அடிபணியவில்லை.  பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.  ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் அனைத்து நாடுகளின் மக்களையும் கட்டுப்படுத்த முடியாது.  வளைகுடா பகுதி பொதுமக்கள் போராட்டத்தால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து மத்திய கிழக்கை மாற்றியமைக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை நோக்கி சீராகச் செல்வதாக உறுதியளித்துள்ள சவுதி அரேபிய ஆளும் வர்க்கம், ஹமாஸைக் கண்டிக்கும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை.  முதன்முறையாக, முஹமது பின் சல்மான் தனது பரம எதிரியான ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராசிக்கிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார்.

சொந்த மண்ணிலேயே கைதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு போராட்டத்தை தவிர வேறு வழியில்லை. செப்டம்பர் 19-26 தேதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபையில், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், “சமாதானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை, நீதியையும் மனிதாபிமான கொள்கைகளை மதிக்காதவர்களையும் எதிர்ப்பதன் மூலம் காலனிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயகத்தையும் நியாயமான உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று

அழைப்பு விடுத்தார். உண்மை, நீதி மற்றும் மனித விழுமியங்கள், காலனித்துவப் படையெடுப்பிலிருந்து நிலத்தை விடுவிக்க ஒரு மூலோபாயப் புரட்சி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். இந்  நிலத்தில் இருந்து “இந்த கொடூரமான ஆக்கிரமிப்பை” அகற்றினாலன்றி பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வாய்ப்பில்லை.  அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த கொடூரமான ஆக்கிரமிப்பை முடிவுக்கு வரவும், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் கூட்டு சோசலிச அரசை உருவாக்கவும் போராட வேண்டும்.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் துணுக்குகளை பிற்போக்குவாதிகள் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.!  ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் ஆதரவுடன் ஹமாஸ் போராளிகள், வலிமைமிக்க பாதுகாப்புப் படை என்று அறியப்பட்ட இஸ்ரேலை வரலாறு காணாத தாக்குதலுக்கு ஆளாக்க முடிந்தது.  தொழில்துறை அதிகாரத்தில் மேலாதிக்க சக்தியான தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர எழுச்சியாக அது வெளிப்பட்டிருந்தால் நிலைமை எப்படி மாறியிருக்கும்?    

1914 இல் நடந்த முதல் உலகப் போரின் போது யூத மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்தியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய போர் அமைச்சரவை செய்த சதித் திட்டத்தின் விளைவுதான் இன்று இருக்கும் இஸ்ரேல் அரசு.  பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் ஆர்தர் பால்ஃபர் சியோனிஸ்ட் தலைவரான ரோஷெய்ல் சாமியிடம், 1917 ஆம் ஆண்டில்,  அப்போது ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ‘யூத மக்களுக்கான தேசமொன்றை’ அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுந்த மக்கள் எழுச்சிகளை நசுக்குவதும், ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைக்க இன மற்றும் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத் தேவையாக இருந்தது. 1948ல் பாலஸ்தீனத்தில் சியோனிச இஸ்ரேல் உருவானதும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே உத்தியின் விளைவுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்று, முழு ஏகாதிபத்திய அமைப்பும் ஆழமாக வெடிப்புக்கு உள்ளாகும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் மூழ்கி மூன்றாம் உலகப் போருக்கான திட்டங்களுக்குத் திரும்புகிறது.  அதனால்தான் இஸ்ரேலில் இந்த முரண்பாடுகளின் புதிய கட்டம் இப்போது உருவாகி வருகிறது.  தொழிலாள வர்க்கம் சுதந்திரத்தை விரும்புகிறது, ஏகாதிபத்திய முதலாளித்துவம் அதை முற்றிலுமாகத் தகர்க்க விரும்புகிறது.  அதனால்தான் பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது இஸ்ரேல் உட்பட ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தாலும் தவிர்க்க முடியாத ஒரு வர்க்கத் தேவையாகும்.

நான்காம் அகிலத்தின் சர்வதேச குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அதற்கு தேவையான தொழிலாள வர்க்க சர்வதேசிய முன்னோக்கு மற்றும் நடவடிக்கைகளை வளர்த்துக்கொண்டு போராட்டத்தில் நுழைந்துள்ளன.  பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஆதரவாக நிற்கும் கொழும்பு நடவடிக்கைக் குழு, அந்தப் போராட்டத்தைச் சுற்றி திரளுமாறு அனைத்து முற்போக்கு மக்களையும் கேட்டுக்கொள்கிறது.

எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தை வலுப்படுத்த பொதுமக்களை அழைக்கிறோம் 

நெதன்யாகு அரசுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள் வழங்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்துங்கள்!

 காஸா முற்றுகையை உடனடியாக நீக்குங்கள்!

 சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர், மருந்து, மின்சாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்குங்கள்!

 பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்து!

சியோனிச ஆக்கிரமிப்புப் படைகளை அகற்று!

[இந்த அறிக்கை முதலில் சிங்களத்தில் அக்டோபர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டது]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top