Living Conditions

Seedevi

“லயத்து கோழிகள்” தொழிலாளர்களின் வாழ்க்கையை புத்துயிர்க்கும் ஒரு கலைப் படைப்பு

நந்தன நன்னெத்தி.

எழுத்து, இயக்கம் மற்றும் இசை: இராசையா லோகானந்தன்

ஆடை வடிவமைப்பு: க. வசந்தப்ரியா

தயாரிப்பு நிர்வாகம் மற்றும் ஒப்பனை: செல்வராஜ் லீலாவதி

நாடகப் பொருட்கள்: மு. நவநீதன்

தயாரிப்பு: தியேட்டர் மேட்ஸ் பண்பாட்டுக் கழகம் 

Kotiyagala
Estate worker audience at Kotiyagala Estate

வீதியில் அல்லது மேடையில் அரங்கேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்நாடகம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சித்தரிக்கிறது. இராணுவம், பொலிஸ், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் சில தொழிற்சங்கத் தலைவர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி ஜூலை 9 அன்று இதன் முதல் காட்சி இடம்பெற்றது. பின்னர் இந்த நாடகம் ஜூலை 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் கெர்க்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவு மற்றும் கெம்பியன் மேற்பிரிவு ஆகிய தோட்டங்களில் அரங்கேற்றப்பட்டது. மற்றும் எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்படவிருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நாடகம் நடத்தப்படுவதை புலனாய்வு வலையமைப்பின் ஊடாக அறிந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவப் பிரிவு அதிகாரி தமது தளத்தில் தாம் அறியாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று நாடக நெறியாளருக்கு தொலைபேசியில் அறிவித்தார். இன்னும் இதுபோன்ற  பல தடைகளை நாடகக் குழுவினர் எதிர்கொண்டனர். 

நாடக இயக்குனர் லோகானந்தன்,தான் சந்தித்த இக்கட்டான சூழலை “என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஜூலை 9” என்ற தலைப்பில் முகப் புத்தகத்தில் பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.

“இந்த நாள்,நான் பிறந்து வளர்ந்த எனது சொந்த தோட்டத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினேன். கொட்டியாகலை மேற்பிரிவு எனது தோட்டம். பொகவந்தலாவ எங்களுக்கு அருகில் உள்ள நகரம். நாடகத்தை நான் எனது வாழ்வாக்கிக்கொண்டேன். அதற்கு விதை போட்டதே எனது கொட்டியாகலை தோட்டம்தான். மிகச்சாதரணமாக தொடங்கப்பட்ட இந்த நாடக நிகழ்வானது இறுதியில் பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் அடிப்பட்ட சமூகத்தின் எழுச்சியாக மாறிப்போனது. “லயத்துக் கோழிகள்” ஒரு வரலாற்று நிகழ்வாகிப் போனது. இந்த பதிவு நாடகத்தை பற்றியதல்ல. எங்கள் மக்களின் மனத்துணிவு பற்றியது. எங்களின் (நாடகக் குழுவின்) அர்ப்பணிப்புகளும் எதிர்ப்பார்ப்புகளும் நொறுங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த அதிசயம் சற்றென நிகழ்ந்தது. நாடகம் போடக்கூடாது என்று கடுந்தொனியில் கூறியவர்களை மிகச்சாதரணமாக கையாண்டார் எனது அருமை அண்ணா தனாஸ் அவர்கள். இவர்  எங்கள் தோட்டத்தின் முன்னாள் போராட்டக்காரரான மரியசூசை மாமா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்காக என்னோடு தோள் நின்று உழைத்த என் அருமை தம்பிகள் பிரகாஷ் மற்றும் விமல்காந்த் ஆகியோரின் முயற்சியும் ஈற்றில் அவர்களின் தற்துணிவும் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த செயல் ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு பின்னர் அடம்பன் கொடிகள் திரள்வதை என் தொலைபேசி இதுவரை உறுதி செய்து கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறி தெரிகிறது. அன்றைய தினம் நாடகம் நடைபெறவில்லை என்பதை அறிந்து இருப்புக்கொள்ளாமல் தவித்து நின்றவர்கள்,நாடகம் நடைபெறுகிறது என்பதை அறிந்தவுடன் ஓடோடி வந்ததையும் நான் உணர்ச்சிப் பொங்க பார்த்து பூரிப்படைந்தேன். நாடக நிகழ்வுக்குப் பின்னர் என்னை ஆரத்தழுவி முத்தமிட்டவர்கள் எத்தனை பேர். அவர்கள் கண்களில் எத்தனை சந்தோசம். குழந்தைகளின் முகத்தில் எத்தனை சந்தோசம். இவர்களுக்காக நாங்கள் நாடகம் போட்டே ஆக வேண்டும். எங்கள் பயணம் இன்னும் தொடரும். ஒரு பெருங்கூட்டமாக நாங்கள் ஆர்ப்பரிப்போம்.”

மேலே குறிப்பிட்டுள்ள சூழலைப் பற்றி மட்டுமே நாம் நினைத்தாலும், வரலாற்று மாற்றத்தை தவிர்க்க முடியாமல் அழைக்கும் போராட்டத்தின் அடையாளமாக ‘லயத்து கோழிகள்’  உள்ளது. நாடகத்தின் அசாதாரண வடிவமும் இத்தகைய சமூகத் தேவையிலிருந்து எழுகிறது.

இது ஒரு கோழி திருட்டு பற்றிய கதை. முருகன் ஆண்டி (எம். அஜந்தன்) மற்றும் ஆண்டி முருகன் (அ. நவநீதன்) ஆகிய இருவரும் கோழி திருடர்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திருடுகிறார்கள். நாடு முழுவதும் கோழிகள் திருடப்பட்டு வருகின்றன, மக்கள் தங்கள் கோழிகளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க போராடுகிறார்கள். இந்தப் போர் ஏழை பெண் (எஸ். சீதேவி), அவரது இளம் மகன் (எஸ். வசீகரன்) மற்றும் அவர்களை ஆதரிக்கும் மற்றொரு பெண் (கலையரசி) ஆகிய மூவரால் சித்தரிக்கப்படுகிறது. நாடகத்தில் திருடர்களுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலை உயர்த்தி, ஏழை பெண் தனது கோழியை பராமரிக்கும் பொறுப்பை இளைய தலைமுறையை குறிக்கும் மகனிடம் ஒப்படைக்கிறாள். திருடர்கள் அவரிடம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றி கோழியைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள், ஆனால் தோல்வியுறுகிறார்கள், இறுதியாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கோழியைக் கடத்திச் செல்கிறார்கள். ஒரு மந்திரவாதி (எஸ். லீலாவதி) ஏகாதிபத்திய ஆடையை அணிந்து, கோழியை கைப்பற்ற நினைக்கும் இரண்டு  திருடர்களின் போராட்டத்திற்கு நடுவராகி, கோழியின் வயிற்றில் இருந்து பணக்கட்டை  இழுத்து அவற்றை தனது பையில் போட்டுக் கொள்கிறார். திருடர்கள் எடுப்பதற்காக சில நாணயங்கள் தரையில் வீசப்படுகின்றன. திருடர்கள் பேராசை கொள்கிறார்கள், மந்திரவாதி அவர்களிடம் இரண்டு தீப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு கோழியை எடுத்துச் செல்கிறார்.

Loganathan
Director Loganathan with his fans

அப்போது அந்த ஏழை, “நாங்கள் வாழ்நாள் முழுவதும் சேவலைத் தேடுகிறோம். ஆனால் உண்மையில் நாம் தொலைத்தது என்ன? அதுதான் எங்கள் வாழ்க்கை” என்று உறுதியான இதயத்துடன் அறிவிக்கிறார். வாழ்க்கையைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லாத அவள் உட்பட தொழிலாளி வர்க்கம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. “நாங்கள் எங்கள் உயிரை இழந்துவிட்டோம்,” என்று கெர்க்கஸ்வோல்ட்  தோட்டத்தில் ஒரு தொழிலாளி நாடகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் எங்களுக்கு முன் கூறினார். இந்த வார்த்தைகள் பொதுவாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிரொலிக்கும்.

இரண்டு திருடர்களும் ரகசியமாக ஒரே கோழியை திருட முயல்வது, கடைசி நேரத்தில் இந்த செயலில் பெண் தலையிட்டு திருடர்களின் நோக்கத்தை முறியடிப்பது, இது மீண்டும் மீண்டும் நடக்கிறது, கோழியை பாதுகாக்கும் பொறுப்பை இளைய தலைமுறை மகனிடம் ஒப்படைத்த பின் திருடர்களுக்கு இடையே போட்டி வலுக்கத் தொடங்குகிறது. லோகாநந்தன் வியத்தகு தருணங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனது படைப்பாற்றலை நிரூபித்தது மட்டுமல்லாமல், நாடகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். 

இரண்டு திருடர்களாக நடிக்கும் இரண்டு முக்கிய நடிகர்களின் நடிப்பு பாணி, அந்த கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையையும் எதிர்ப்பையும் கொண்டு வருகிறது, மேலும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கும் மற்றும் தங்கள் இரத்தமும் வியர்வையும் சார்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட தீய ஆளும் வர்க்க போக்குகள் காட்டப்படுகின்றன. இந்த நடிகர்களின் உடைகள், இசையமைப்பு, பாவனைகள் போன்றவற்றுக்கு மலையகக் கூத்து மரபைப் பயன்படுத்தி, தொழிலாளிகளின் வாழ்க்கையிலிருந்து விலகி கதாபாத்திரங்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் லோகானந்தன். மேலும், தொழிலாளிகளின் கோழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொத்தை சொந்தமாக வைத்து திருடர்களுக்கு அற்ப காசு கொடுக்கும் மந்திரவாதியின் உடைகளும் நடிப்பும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. யதார்த்தமான மற்றும் பகட்டான நடிப்பு மரபுகளின் போது யதார்த்தமான பாணிக்கு நெருக்கமாக இருக்கும் வகையில்  கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு தங்களை தாங்களே பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

thieves
Thieves – M. Navaneethan, M. Ajanthan

 கூத்துகளில் பயன்படுத்தப்படும் தாளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் ஊடாகவும், மலையகத்தில் பயன்படுத்தப்படும் தப்பு இசைக் கருவியிலிருந்து எழுகின்ற இசையின் ஊடாகவும் தோட்டத் தொழிலாளர்களின் சூழலையும் அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதோடு எம்மையும் அதனோடு இரண்டற உறவு கொள்ள வைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய தொழிலாளர்கள் கடல் தாண்டி இலங்கையின் காடுகளின் வழியாக மலைகளுக்குச் செல்லும் கடினமான பயணத்தின் போது கொடிய விலங்குகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு  தப்பு எனும் இசைக்கருவியை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

estate workers
Estate Workers -S. Seedevi, S. Kalei Arasi

இந்த நாடகம் தொழிற்சங்கங்கள் மற்றும் நேசவாத வலதுசாரி போலி-இடது முன்னணிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் அது பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் கீழ் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதால் தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனாலேயே, லயத்துக் கோழிகள் ஒரு யதார்த்தமான கலைப் படைப்பாகக் கருதப்படுகிறது, இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தூண்டும் ஒரு கலைப் படைப்பாகும்.

நாடகம் ஆரம்பம் முதல் இறுதிவரை வெளிப்படுத்தும் உணர்வுகள் வர்க்க இயல்புடையதாகவும், உழைக்கும் வர்க்கத்தின் மனநிலையைத் தூண்டுவதாகவும் இருப்பதால், தற்போதைய சமூக வளர்ச்சியின் வரலாற்றுத் தேவையைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பாகவும், படைப்பாளிக்கு என்ன சமூக நிலைமைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Magician
Magician – S. Leelawathie

இதற்கு ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட இந்நாடக ஆசிரியரின் கூற்று நிறைவானதாகும். இலங்கையில் தற்போது இருநூறு வருட மலையக மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் எழுதப்படுகின்றன. கொண்டாட்டங்கள் ஊடாக  தங்களைப் பற்றி சிந்திக்க அம்மக்கள் தூண்டப்படுகிறார்கள். கோவிட் எனும் தொற்றுநோய் பரவி கடந்த நான்கு வருடங்களில் வர்க்க சமூகத்தின் நெருக்கடிகள் அடக்க முடியாதவாறு தொடர்கின்றன. கொண்டாட்டங்களோடு மேற்கூறிய செயல்பாடும் மலையக மக்களின் உணர்ச்சியை தூண்டுகிறது. இதற்கிடையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹட்டன் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த  இஷாலினி என்ற பள்ளிச் சிறுமி தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட 2021 ஜுலை சம்பவமும் இம்மக்களின் மனதைவிட்டு அகலவில்லை என்பதும் நாங்கள் இவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இருந்து தெரிய வருகிறது. இஷாலினி மலையக மக்களின் வாழ்க்கை‌ விதியின் அடையாளம். கல்வி, வேலைவாய்ப்பு, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை சொற்பமாக பெற்றுக்கொண்டிருக்கும் தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பிள்ளைகள் போதைப்பொருளுக்கு ஆளாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களும், முதலாளித்துவ அரசியலும் ஏற்படுத்திய அவலங்களும், அவர்களின் வணிக தந்திரோபாயங்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்குவதும் பிரச்சனையாகி விட்டது. இதற்கிடையில், நிலையற்ற முதலாளித்துவ அரசாங்கங்கள் எந்தவொரு ஜனநாயக உரிமையையும் தாக்குவதில் உறுதியாக உள்ளன. வாழ்க்கை நிலைமைகளின் கொடூரமான வீழ்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில், தங்கள் பெற்றோர்களுக்காக அவர்களின் பிள்ளைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள் எனினும் அவை தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன.  தோட்டத்தில்  பிறந்து தோட்டத்தில் வளர்ந்த உண்மையான கலைஞனால் இந்த சமூகத்தில், இவற்றை சகித்துக் கொண்டு இருக்க முடியாது.

Seedevi
S. Seedevi, S. Waseekaran

இந்த கசப்பான உண்மையை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் மற்றும் கொடுங்கோல் ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமான நடிகையான எஸ்.  லீலாவதியின் மந்திரவாதி பாத்திரம் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அவரது அற்புதமான நடிப்பால் நாடகம் உச்சம் அடைகிறது. குறிப்பாக, தான் நடிப்பு கலையில் தேர்ச்சி பெற்ற நடிகை என்பதை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்ட சமூகத் தேவையைப் புரிந்துகொண்டு கருத்து ரீதியாக மீண்டும் உருவாக்கி, நடிப்பில் தனித்து நின்றார். ஏழைப் பெண்ணாக நடித்த எஸ். சீதேவியின் கதாபாத்திரம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருடர்களாக செயல்பட்ட எம். அஜந்தன் மற்றும் எம். நவநீதன் ஆகியோர் லீலாவதி செய்த சாமர்த்தியத்தை  அடைந்து கொள்ள முடியும் என்பதும், பாத்திரங்களின் சமூகச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தமது ஆற்றலை இன்னும் சீர்படுத்துவதன் மூலமும், நாடகத்தை இன்னும் தரமுயர்த்த முடியும் என்பது தெளிவாகிறது. பயிற்சிப் பருவத்தினரான எஸ். வசீகரன் வசனங்களை வெளிப்படுத்துவதில் காட்டிய திறமையை உடல்மொழியிலும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

நவநீதனின் நாடகப் பொருட்கள் சிறப்பாக உள்ளன. சேவல்,  கூடு மற்றும் உபயோக பொருட்கள் குறிப்பாக துப்பாக்கியினை ஒரு பொம்மையாக தெளிவாகக் காணக்கூடிய வகையில், நாடகத்தின் கருப்பொருளுக்கு சக்திவாய்ந்த முக்கியத்துவம் கொடுக்க அவர் பங்களித்திருக்கிறார்.

இவ்வாறான ஆக்கங்களைத் தடுக்க ஆளும் வர்க்கம் அண்மையில் எடுத்த ஒரு நடவடிக்கை, கலைஞை நடாஷா எதிரிசூரியவை ஒரு கலைப் படைப்புக்காக கைது செய்தமையாகும்.1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கம் கலைக்கு எதிராக வலுவான தாக்குதலைத் தொடுத்தது. அன்று முதல் வேட்டையாடப்பட்ட கலைஞர்கள் ஏராளம். பல வருடங்களுக்கு முன்னர் பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகம் தேசிய மட்டத்தில்  இறுதிப் போட்டிக்கு தெரிவானதையடுத்து, சமூக பிரச்சினைகள் சார்ந்த நாடகங்களை மாணவர்கள் உருவாக்குவதை தடை செய்து, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, புராதன கதைகளை அல்லது அவற்றை புதிய வடிவில் படைப்பதற்கு மட்டுமே  மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உரையாடல் செந்தமிழில் இருப்பது கட்டாயமாகும். நாடக போட்டி நடுவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்படி, ‘நாடகத்தில் அரசியல் கருத்துகளுக்கு தடை’, ‘மதங்களை இழிவுபடுத்தக் கூடாது,’ போன்றவை அடங்கியுள்ளன.

அதுபோலவே உலகெங்கிலும் உள்ள அரசுகள், கலை, கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்துகொள்வதில்லை. கலைச் சுதந்திரத்திற்காக முதலாளித்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர்கள் மட்டும் கலை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உடனடியாக இறங்கலாம். சமூக யதார்த்தத்துடன் தொடர்பில்லாத ஒரு கலை எந்த வகையிலும் சிறந்த கலாச்சார முன்னேற்றத்திற்கு உதவாது. இதன்மூலம், சமூக வளர்ச்சியின் பயனை ஏற்றுக்கொண்ட உண்மையான கலையை, ‘லயத்து கோழிகள்’ நாடகத்திற்கு எதிரான இயக்கத்தை தோற்கடித்த உழைக்கும் வர்க்க சக்தியின் வேகத்தை பாதுகாக்க முன்முயற்சி எடுக்க முடியும். அதன்படி, தொழிலாளர் போராட்டக் குழுக்களில் ஒரு மக்கள் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கி, அனைத்து பிரிவுகளையும் தாண்டி, சகோதரத்துவத்தின் கரத்தை நீட்டுவது இன்றைய கலைஞர்களின் தலையாய சமூகப் பொறுப்பாகும். லோகானந்தன் குறிப்பிடுவது போல் நாங்கள் பெரும் கூட்டமாக ஆர்ப்பரிக்க வேண்டும்.

[இந்தக் கட்டுரை முதலில் சிங்களத்தில் ஜூலை 20, 2023 அன்று வெளியிடப்பட்டது]

“லயத்து கோழிகள்” தொழிலாளர்களின் வாழ்க்கையை புத்துயிர்க்கும் ஒரு கலைப் படைப்பு Read More »

Priyantha

සමෘද්ධිය හා අස්වැසුම අහිමි කරනු ලැබූවෝ  ‘ද සෝෂලස්ට්’ වෙබ් අඩවියට කතා කරති

අපේ වාර්තාකරුවන්

ජාත්‍යයන්තර මූල්‍ය අරමුදගේ නය ප්‍රතිවෘහගතකරනයට අදාල නියෝග ක්‍රියාත්මක කරමින් සිටින රනිල් වික්‍රමසිංහ ආන්ඩුව විසින් ක්‍රියාවට දමා ඇති සමාජ කප්පාදු වල කොටසක් ලෙස දුගී කම්කරු, ගොවි ඇතුලු පීඩිත මහජනතාව මතට හෙලන ලද දැවැන්ත කප්පාදු අතරින් සොච්චමක් වූ “සමෘද්ධි” සහනාධාරය ද කපා දැමීම මගින් එම ජනතාව අන්ත අසරනභාවයට ඇද දමා ඇත.

සමෘද්ධිය කපා දැමීමෙන් පසු ආන්ඩුව “අස්වැසුම”  නමින් ඉදිරිිපත් කර ඇති නව සීමිත සහන සැලැස්මේ ප්‍රතිලාභ ලැබීම සඳහා නුසුදුුසු බවට ⁣යෝජනා කිරීම නිසා කර කියා ගත නොහැකි වූ දුප්පත් ජනයා හෙට දින ජීවිතය ගටගසා ගන්නේ කෙසේද යන්න පිලිබඳ පසුවන්නේ මහත් අවිනිශ්චිතතාවයකිනි. 

අස්වැසුම ⁣ප්‍රතිලාභ නොලැබීම සම්බන්ධ අභියාචනා ගොනුකිරීම ජුලි 6 දින අවසන් විය. ඒ වන වට අභියාචනා ⁣968,000ක් ද, විරෝධතා 17, 500ක් ද ලැබී තිබුනු බව  කැබිනට් ප්‍රකාශක ඇමති බන්දුල ගුනවර්ධන ප්‍රකාශ කලේය.

මෙම නව ප්‍රතිලාභ ලැබීම ද අහිමි කරනු ලැබූ පවුල්වල සාමාජිකයෝ “ද සෝෂලිස්ට්” වෙබ් අඩවියට තම දුක් ගැනවිලි ප්‍රකාශ කලෝය. ඒ කිහිප දෙනෙකු මුහුන දී ඇති ජීවන අර්බුදය පිලිබඳ කෙටි වාර්තාවක් අපි පහත පල කරමු:

විමලජීව පවුල, බිංගිරිය ප්‍රාදේශීය  ලේකම් කොට්ටාශයේ, විලත්තව ප්‍රදේශයේ පදිංච්ව සිටිති. පියා, මව හා දුව සහිත පවුලේ සමාජිකයින් 3 කි. පියා වෘත්තියෙන් ත්‍රීවීල්  රියදුරෙක් වන අතර අපස්මාර රොගයෙන් පෙලේ. ත්‍රීවීලරය වෙනත් අයෙකුට  අයත් එකකි. ඒ සදහා  දිනකට රු 500ක් ඔහුට ගෙවිය යුතුය. මව කඩයක ඇදුම් මැසිම කරයි. දුව උසස් පෙල  හදාරන  ශිෂ්‍යාව කි. ප්‍රදේශයේ  දුගීම පවුලට නිවසක් ඉදිකිරීමට රජය විසින් ලබදෙන රුපියල් ලක්ෂ  6ක මුදල මේ පවුලට ලබා ගැනීමට හැකිව ඇත. මව මෙසේ පැවසීය:

“නිවස හැදීමට ලක්ෂ  10ක පමන මුදලක් වැය වෙන නිසා ඒ මුදල අපිට වෙනම හොයාන්න වුනා. ඒ නිසා, ඒ මුදල සමෘද්ධි බැංකුවෙන් නයක් විදියට ගත්තා. සමෘද්ධි  සහනාධාර  වශයෙන්  රැපියල් 3000ක මුදලක් අපට ලැබුනා. බැංකුවේ නය වාරිකය රුපියල්  6000ක්.  සහනාධාර  වශයෙන්  ලැබෙන රුපියල් 3000ට අමතරව තව රුපියල්  3000 ක මුදලක් අතින් පියවන්න ඕන. එම රුපියල් 3000 ත්‍රීවීල්  එකෙන්  උපයන මුදල් වලිනුයි මම ඇදුම්  මැසීමෙන් හොයන මුදලිනුයි තමයි ගෙවුවෙ. දූ පුලියන්කර විදුහලේ උසස් පෙල  පංතියේ ජනමාධ්‍ය  විශය ධාරවේ ඉගෙන ගන්නවා.  වසරක් යනතුරුත් මීඩියා  විෂයට ගුරුවරයකු නොලැබුනු නිසා මාදම්පේ  ජාතික  පාසලට දූව ඇතුල් කලා. ඒත්  නැවත වරක් එයාව ඇතුල් කලේ  12 වසරට. ඒ නිසා දූට වසරක කාලයක් අහිමිවී වුනා. උසස් පෙල  පංති සදහා මාසෙකට රුපියල්  12000ක් පමන වැය කිරීමට සිදු වෙනවා. මුදල් සොයා ගැනීමට  නොහැකි නිසා දූ පංති යාම නතර කලා. මේච්චර අසරන වෙලා ඉන්න අපේ සමෘද්ධි  සහනාධාර⁣යත් දැන් කපා දමලා. දැන් අපි නය ගවාගන්නෙත් කෙහොම ද?,” මව හඬූ කදුලින් ප්‍රකාශ කර සිටියා ය.  

සමෘද්ධිය කපා අස්වැසුම  සහනාධාර  සැලැස්මට හිමිකම් ලැබී නැති  කුමාරසිංහ පවුලේ තත්ත්වය  මෙසේ ය.  කුමාරසිංහගේ පදිංචිය-බිංගිරිය ප්‍රාදේශීය  ලේකම් කොට්ඨාශයේ,  නිතලව ප්‍රදේශයේ ය. ඔහු තම කතාව මෙ⁣සේ ප්‍රකාශ කලේය: 

“මම ත්‍රීවීල් රියදුරෙක්. ත්‍රීවීල් එක හයර් කරල තමයි ජීවත්  වෙන්නෙ. ඊට අමතරව සහල් පිටි කරල කෑම සකස් කරන කඩ වලට දෙනව. මාගේ පවුලේ  සාමාජිකයින් 6යි. මගේ වැඩි මහල් දරුවා විශේෂ  අව්‍යශ්‍යතා  සහිත දරුවෙක්.  දැන් වයස අවුරුදු 22 ක්. එක ගැහැනු දරුවෙක් උසස් පෙල අධ්‍යාපනය හදාරනව.  අනික් දරු දෙන්න නිවුන්නු, ඉගෙනගන්නෙ  6 වසරෙ. මගේ බිරිද රැකියාවක් කරන්නෙ නැහැ. අපිට සමෘද්ධි  සහනාධාරය  ලැබුන.  රුපියල්  3000ක් ලැබුනා.  දැන් ඒක කපල.  අපි සමෘද්ධි බැංකුවෙන් රුපියල්  ලක්ෂ  2ක නයක් අරන් තියෙනවා. සමෘද්ධි  රැපියල් 3000 යොදා ගත්තෙත් ඒක ගෙවන්න. වාරිකයෙ ඉතිරි ටික හම්බ කරල තමයි ගෙව්වෙ.                      

දැන්  රටේ ආර්ථික  ප්‍රශ්න  නිසා හයර් ලැබෙනව අඩුයි. පිටි වෙලදාම 25%කින් විතර අඩු වෙලා. වියදම්  දරාගන්න බෑ. ලමුන්ගේ  පංති  ගාස්තු  වලට මාසෙකට රුපියල්  9000ක් විතර යනව. බස් ගාස්තු දවසකට රුපියල් 400ක්.  කෑමට යන වියදම්  කියල වැඩක් නැහැ.  නොකනව කිව්වොත් නිවැරදියි. මෙහෙම තියෙද්දි  තමයි සමෘද්ධි  සහනාධාර  කපල තියෙන්නෙ.  හේතුව  මම ත්‍රීවීල්  එකක් එලවන එක.  ත්‍රීවීල්  එකේ ටයර් දෙක දාගන්න රුපියල්  26000ක් ඕනෙ. ඉදිරියෙ මොනවද කරන්නෙ කියල හිතා ගන්න බැහැ. හුගක් දවස්වල  රෑට  නින්ද යන්නෙ නැහැ.”

අස්වැසුමට අභියාචනයක් ඉදිරිපත් කල මුත් ඒ පිලිබඳ විශ්වාසයක් නැතැයි ඔහු වැඩිදුරටත් කීවේය.

ප්‍රියන්‍ත, බිංගිරිය ප්‍රාදේශීය ලේකම්  කොට්ටාශයය්, නිතලව, දඹුවවත්ත ප්‍රදේශයේ වාසය කරයි. ඔහුගේ පවුලට සමෘද්ධිය ද, අස්වැසුම ද දෙකම අහිමි කරනු ලැබ ඇත.  ඔහු මෙසේ ප්‍රකාශ  කලේය:

priyantha
ප්‍රියන්‍තගේ නිවස

“මගේ රැකියාව වාහන අලුත් වැඩියා කරන එක. ගරාජ්  එක තියෙන්නෙ  ගෙදරමයි. තනියෙන් වැඩ කරන්නෙ. ගොලයො දාගෙන වැඩ කරන්න තරම් ආදායමක්  නැහැ. මට දරුවො තුන්  දෙනෙක් ඉන්නවා. එක් කෙනෙක් 4  වසරේ. තවත් එක්කෙනෙක් පෙර පාසල් යනව. බාලම දුවට අවුරුදු 2 යි. තුන් දෙනාම  ගැහැනු දරුවො. ඉන්න ඉඩම මට අයිති එකක් නෙවෙයි. මගේ ඥාතියෙකුගේ. බිරිඳ රැකියාවක් කරන්නේ නැහැ.  මට සමෘද්ධි සහනාධාර ලැබුනා රුපියල් 3500ක්.  ඒකෙන්  රුපියල්  500 ක්  රක්ෂණ  සහ සුභසාධන වලට කැපෙනව. මම ගේ හදන්න රු 100, 000ක් සමෘද්ධි  බැංකුවෙන්  නය අරගෙන තියෙනව. ඒ ණය වාරිකය ගෙව්වෙත්  සහනාධාර  3000න් තමයි. ගරාජ්  එකෙන් ලැබෙන ආදායම  හැර වෙනත් ආදායමක්  මට නැහැ. ගරාජ් එකෙනෙනුත් ලැබෙන ආදායම  හොදටම අඩුවෙලා. මේ සැරේ මට ලැබුනු සමෘද්ධි සහනාධාර  මුදලත් කපල. සමෘද්ධි බැංකුවෙන් ගත්තු නයත් දැන් අතින් ගෙවන්න වෙලා. ගමේ නය දෙන  සුභසාධන සමිතියෙනුත් නය අරන් තියෙනව. ගේ හදල ඉවරත් නැහැ. ලමයගෙ ශිෂ්‍යත්ව පංතියට මාසෙකට රුපියල් 6000ක්  විතර යනව. මෙහෙම තියෙද්දි තමයි මගේ සමෘද්ධි  සහනාධාර  කැපුවෙ. ජීවිතේ  අන්තිම දුෂ්කර තත්ත්වෙකට පත්වෙලා ඉන්නෙ. මොකද කරන්නෙ කියල හිතා ගන්නවත් බැහැ. ගරාජ්  එකක් කරන නිසා තමයි මගේ සහනාධාර  කැපුවෙ. බලන්න ආපු මිනිස්සුන්ට [අස්වැසුම සමීක්ෂකයන්ට] මම පත්වෙලා  ඉන්න තත්ත්වය කිවුව. ඒත් වැඩක් වෙලා නැහැ. අම්ම, තාත්තා  වෙනම ඉන්නෙ. ඒ අයටත් රැකියාවක් නැහැ. ඒ අයගෙත් සහනාධාර  කපල. අභියාචනයක්  දැම්මා ඒත් විශ්වාසය ක් නැහැ.”

බලපිටිය ප්‍රාදේශීයට අයත් පරගහතොට ගමේ ජීවත්වන ජයසේකර සමෘද්ධි සහනාධාරය ලැබු දුගී පෙදරේරුවෙකි. මෙවර අස්වැසුම වැඩසටහන යටතේ ඔහු ලැබු සහනාධාරය අහිමි කොට ඇත. රැකියාව නිරතව සිටි කාලයේ සමෘද්ධිය ලැබු ඔහුට මෙවර සහනාධාරය අහිමි වී ඇත්තේ අසනීප තත්ත්වය නිසා වසර 3ක සිට රැකියාවක් නොකරන තත්ත්වයේදී ය. ඔහුගේ දුක් ගැනවිල්ල මෙසේය: 

“දරුවන් විවාහ වෙලා අපෙන්  ඈත් වෙලා ඉන්නෙ. ඒ අයගෙ දරුවන්  නඩත්තු කරන කොට එයාලට අපට උදව්වක් කරන්න අමාරුයි. මගේ බිරිඳ ගොඩාක් කාලයක ඉඳල ආතරයිටීස් රෝගය හැදිල ඉන්නෙ. ඒ නිසා එයාට කුලි වැඩකටවත් යන්න බෑ.”

අත්‍යවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය, බෙහෙත්  දිනපතා මිල වැඩිවීම ගැන ජයසේකර පැවසුවේ, “අතට හම්බෙන සොච්චම් මුදලින්  මිල වැඩි වෙන විදියට දේවල් ගන්න තියා හිතන්නවත් බැහැ. අපි නොකා නොබී තමයි ජීවත් වෙන්නෙ.”

පරගහතොට ප්‍රදේශයේ ම 75හැවිරිදි සෝමාවතී ද  තමන් මුහුන දෙන දුෂ්කර ජීවන කොන්දේසි හෙලි කලාය: 

“මහත්තයා මගෙන් ඈත් වෙලා. මට දරුවො නැහැ. ගෙවල්වල කුලී වැඩක් කරලා තමයි ජීවත් වෙන්නෙ. අපි දැන් වයස නිසා එහෙම වැඩක් හොයා ගන්න අමාරුයි.”

කලින් ඇයට සමෘද්ධිය ලැබුනු නිසා යම් සහනයක් ලැබුනු බව සදහන් කල සෝමාවතී, එකී සහනය කපා හැරීයේ ඇයි ද කියා හිතාගන්න බැහැයි පැවසුවාය.

“අපි වගේ අයට සහනාධාර නැත්නම් කාටද දෙන්න ඕන ?”, ඇය ප්‍රශ්න කලාය.

සමෘද්ධිය හා අස්වැසුම අහිමි කරනු ලැබූවෝ  ‘ද සෝෂලස්ට්’ වෙබ් අඩවියට කතා කරති Read More »

Scroll to Top